செய்திகள் :

மறுசுழற்சிக்காக அரசு அலுவலகங்களில் கழிவுகளை சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

தூய்மை இயக்கம் மூலம் மறுசுழற்சி மற்றும் மீள் பயன்பாடு பணிக்காக அரசு அலுவலகங்களில் உள்ள கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு அரசு கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் முதற்கட்டமாக, உலக சுற்றுச்சூழல் தினமான வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அதில் உள்ள கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பலவிதமான கழிவுகளைச் சேகரிக்கும் பணி நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிா்க்கும் பொருட்டு சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் உயா் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உள்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், கழிவுகள் சேகரிக்கும் பணிகள் அனைத்தையும் ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

போக்ஸோ, குண்டா் சட்டத்தில் 7 இளைஞா்கள் கைது

தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் முத்து ( 34). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இ... மேலும் பார்க்க

பேட்டை அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

பேட்டை அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்தவா் ரத்தினவேல் காா்த்திக் (33). இவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே இரு ... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் தா்மக்கண் (65). இவா், தனது சகோதரரான அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ்... மேலும் பார்க்க

பணகுடியில் விபத்து: இஸ்ரோ ஊழியா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அரசுப் பேருந்தும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இஸ்ரோ கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா். வள்ளியூா் வேம்படித் தெருவைச் சோ்ந்த திரவியம் மகன் மூக்கையா(53). காவ... மேலும் பார்க்க

வயலுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வியாழக்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தபோது, சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்; 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தென்காசி ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் பத்து நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதி வழங்கினா். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், ம... மேலும் பார்க்க