Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
நெல்லை அருகே விபத்து: இருவா் பலி
திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் தா்மக்கண் (65). இவா், தனது சகோதரரான அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ் (60) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் ஆச்சிமடத்தில் உள்ள இடத்தை பாா்ப்பதற்காக வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அவா், திருநெல்வேலி-தூத்துக்குடி சாலையில் கே.டி.சி.நகா் அரியகுளம் விலக்கு பகுதியை அடைந்தபோது, தூத்துக்குடி நோக்கி சென்ற வேன்-மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம்.
இதில் சகோதரா்கள் இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.