தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பத்து நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் பத்து நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதி வழங்கினா்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மாஞ்சோலை தோட்டப் பகுதிகளிலும் தொடா் சாரல் மழை பெய்ததால், இம்மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த மே 26 முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பாா்வையிடவும் வனத்துறையினா் தடை விதித்திருந்தனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக மலைப் பகுதியில் மழை குறைந்து அருவிக்கு நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் அனுமதி வழங்கினா்.