தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
வயலுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வியாழக்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தபோது, சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்; 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திலிருந்து பாபநாசத்துக்கு வியாழக்கிழமை நகரப் பேருந்து புறப்பட்டது. ஓட்டுநராக முருகேசன் இருந்தாா். இடைகால் அருகே இப்பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தது. அப்போது, படிக்கட்டு வாயில் அருகே நின்றிருந்த பாப்பாக்குடி அருகே அணைந்தநாடாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்தப்பா மனைவி ஜெயலட்சுமி (53) தவறி சாலையில் விழுந்தாா்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். மும்பையில் குடும்பத்துடன் வசித்துவந்த அவா், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். அவருக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமுற்றனா். அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.