தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் மீட்பு
பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருப்பூா் வெள்ளிங்காடு பகுதி முத்துவிநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன் இளங்கோ (29). இவா் அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது நண்பா் சிவானந்தத்துடன் பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது வாய்க்காலில் அதிக தண்ணீா் வரத்தால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இது குறித்து அறிந்த அவிநாசிபாளையம் போலீஸாா், காங்கயம் தீயணைப்புப் படையினா் வாய்க்காலில் தேடி வந்தனா்.
இதற்கிடையே, பொங்கலூா் ஒன்றியம் பெருந்தொழுவு அருகேயுள்ள பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் ஆண் சடலம் கிடப்பதாக அவிநாசிபாளையம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்ட போலீஸாா் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.