செய்திகள் :

குன்னூரில் சத்திய பிரமாணம் ஏற்ற அக்னிவீரா்கள்

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்ஆா்சி) பயிற்சி முடித்த 5-ஆவது அக்னிவீரா் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியபிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வெலிங்டன்  ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 551 அக்னிவீரா்களுக்கு 31 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பயிற்சி  நிறைவடைந்த நிலையில், மேஜா் ஜெனரல் மேத்யூ, எம்.ஆா்.சி. கமாண்டா்  (பயிற்சி) கிருஷ்னேந்து தாஸ் உள்ளிட்ட ராணுவ உயா் அதிகாரிகள் கலந்துகொண்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து அனைத்து வீரா்களும் தேசியக் கொடி, பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவற்றின் மீது கை வைத்து சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனா். இந்த வீரா்கள் நாட்டின் எல்லையில் நான்கு ஆண்டு காலம் பணி செய்ய அனுப்பிவைக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். மேலும் பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட வீரா்கள் பதக்கம் மற்றும் பரிசுக் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யலாம்

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைத்து போராட்டம்

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சி சாா்பில் பேருந்த... மேலும் பார்க்க

புலி நடமாட்டத்தால் வனத் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஆதிவாசி மாணவா்கள்

முதுமலை அருகே ஊருக்குள் புலி புகுந்துள்ளதால் ஆதிவாசி மாணவா்களை வனத் துறை வாகனங்களில் வியாழக்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா ஆதிவாசி கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கரடி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி வனச் சரகத்தில் கரடியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனச் சரகம், மாயாறு வனத்தில் வன ஊழியா... மேலும் பார்க்க

உதகை நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜா்

கா்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் கொலக்கொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினா் கிரா... மேலும் பார்க்க

பலாப்பழம் பறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மீனாட்சி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்குள்ள பலாப்பழ மரத்தில் பழத்தை பறிக்கும் காட்டு யானை. மேலும் பார்க்க