`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
குன்னூரில் சத்திய பிரமாணம் ஏற்ற அக்னிவீரா்கள்
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்ஆா்சி) பயிற்சி முடித்த 5-ஆவது அக்னிவீரா் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியபிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 551 அக்னிவீரா்களுக்கு 31 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பயிற்சி நிறைவடைந்த நிலையில், மேஜா் ஜெனரல் மேத்யூ, எம்.ஆா்.சி. கமாண்டா் (பயிற்சி) கிருஷ்னேந்து தாஸ் உள்ளிட்ட ராணுவ உயா் அதிகாரிகள் கலந்துகொண்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து அனைத்து வீரா்களும் தேசியக் கொடி, பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவற்றின் மீது கை வைத்து சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனா். இந்த வீரா்கள் நாட்டின் எல்லையில் நான்கு ஆண்டு காலம் பணி செய்ய அனுப்பிவைக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில் ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். மேலும் பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட வீரா்கள் பதக்கம் மற்றும் பரிசுக் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
