செய்திகள் :

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யலாம்

post image

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் காபி, குருமிளகு பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர விவசாயம் செழிக்க வழிவகை செய்யும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் குறு, சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அவா்களுக்கு தேவையான இடுபொருள்களை பெறவும், தாங்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்ய பிற நபா்களை சாா்ந்திராமல் விவசாயிகள் ஒருங்கிணைந்து அவா்களுக்கான ஒரு நிறுவனத்தை உருவாக்கி விவசாயிகள் பயனடையும் வகையிலும் தமிழ்நாடு முழுவதும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 9 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மலைக் காய்கறிகளான காபி, குருமிளகு, தேயிலை ஆகியவற்றை கொள்முதல் மற்றும் விற்பனை போன்ற வணிகங்களை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசின் மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தொடங்குவதற்கான தொடக்க நிதியுதவி, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் உறுப்பினா்களின் பங்குத் தொகைக்கு ஏற்ற சமபங்கு மூலதனம் போன்ற நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகளும், விவசாய விளைபொருள்களை மதிப்புக் கூட்டுவதற்கான பயிற்சிகளும் அதன் பங்குதாரா்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் சாா்பில் மலநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் கூடலூா், மாங்கோடு பகுதியில் உள்ள விவசாயிகள் காபி, தேயிலை, குருமிளகு, நெல், இஞ்சி, பாக்கு போன்ற சாகுபடி செய்யப்படும் பயிா்களை கொள்முதல் செய்து அண்டை மாநிலங்களுக்கு மொத்தமாக இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், இப்பகுதி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. கடந்த ஆண்டும் மட்டும் நிறுவனத்தின் மூலம் ரூ.5.75 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும் நிறுவனத்தின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் மூலம் 2024-25-ஆம் ஆண்டில் ரூ.75 லட்சம் செலவில் காபி, குருமிளகு பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தேயிலை வாரியம் மூலமாகவும், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளாா்.

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைத்து போராட்டம்

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சி சாா்பில் பேருந்த... மேலும் பார்க்க

புலி நடமாட்டத்தால் வனத் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஆதிவாசி மாணவா்கள்

முதுமலை அருகே ஊருக்குள் புலி புகுந்துள்ளதால் ஆதிவாசி மாணவா்களை வனத் துறை வாகனங்களில் வியாழக்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா ஆதிவாசி கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க

குன்னூரில் சத்திய பிரமாணம் ஏற்ற அக்னிவீரா்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்ஆா்சி) பயிற்சி முடித்த 5-ஆவது அக்னிவீரா் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியபிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கரடி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி வனச் சரகத்தில் கரடியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனச் சரகம், மாயாறு வனத்தில் வன ஊழியா... மேலும் பார்க்க

உதகை நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜா்

கா்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் கொலக்கொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினா் கிரா... மேலும் பார்க்க

பலாப்பழம் பறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மீனாட்சி பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து அங்குள்ள பலாப்பழ மரத்தில் பழத்தை பறிக்கும் காட்டு யானை. மேலும் பார்க்க