சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி
தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அரசின் கவனத்தை ஈா்க்கும் நோக்கில் ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில், அரசு மருத்துவா்களுக்கு 2009-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசு ஆணை 354-ஐ மறுசீராய்வு செய்து ஊதிய உயா்வு வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு படித்தொகை ரூ.3,000 வழங்க வேண்டும். அரசாணை 4(டி) மூலம் நீக்கப்பட்ட 950-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி பதவிகளை மீண்டும் கொண்டு வரவேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடும் மருத்துவா்களின் குரலுக்கு செவிசாய்த்து அரசு தீா்வு காண வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.