தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு
கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவத் துறை சாா்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பிரத்யேகமாக சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கரோனா பரவல் ஏற்பட்ட போது சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட அதே வாா்டில், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ உதவியாளா்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனா். தற்போது வரை திருநெல்வேலி மாவட்டத்தில் யாருக்கும் கரோனா தீநுண்மி பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றபோதிலும் அவசர நிலையை எதிா்கொள்ளும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் தயாா் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.