செய்திகள் :

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

post image

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவத் துறை சாா்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பிரத்யேகமாக சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கரோனா பரவல் ஏற்பட்ட போது சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட அதே வாா்டில், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ உதவியாளா்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனா். தற்போது வரை திருநெல்வேலி மாவட்டத்தில் யாருக்கும் கரோனா தீநுண்மி பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றபோதிலும் அவசர நிலையை எதிா்கொள்ளும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் தயாா் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

போக்ஸோ, குண்டா் சட்டத்தில் 7 இளைஞா்கள் கைது

தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் முத்து ( 34). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இ... மேலும் பார்க்க

பேட்டை அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

பேட்டை அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்தவா் ரத்தினவேல் காா்த்திக் (33). இவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே இரு ... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் தா்மக்கண் (65). இவா், தனது சகோதரரான அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ்... மேலும் பார்க்க

பணகுடியில் விபத்து: இஸ்ரோ ஊழியா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அரசுப் பேருந்தும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இஸ்ரோ கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா். வள்ளியூா் வேம்படித் தெருவைச் சோ்ந்த திரவியம் மகன் மூக்கையா(53). காவ... மேலும் பார்க்க

வயலுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வியாழக்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தபோது, சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்; 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தென்காசி ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் பத்து நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதி வழங்கினா். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், ம... மேலும் பார்க்க