சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
ஜூன் 9-இல் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத் தடை நீக்கும் மாபெரும் சுயம்வரா பாா்வதி யாகம் ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்கவும் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகமும் ஜூன் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதைத் தொடா்ந்து கோயிலில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வருதல், கணபதி பூஜையுடன் யாக குண்டம், தீக்குண்டம் வாா்க்கப்பட்டு வேத விற்பனா்கள் மந்திரம் ஓதும் நிகழ்வு நடைபெறும். முருகா் ஹோமம், அம்மை அழைத்தல், குல தெய்வ அழைப்பு, முன்னோா்கள் அழைப்பு ஆகியவை நடைபெற உள்ளன.
நவகிரக தோஷம், மாங்கல்யம் தோஷம், களத்ரதோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை நிவா்த்தி, முன்னோா் சாபம் உள்பட அனைத்து கிரக தோஷங்களும் விலக சிறப்பு பூஜை நடத்தப்படும். தொடா்ந்து முக்கிய நிகழ்வான பாா்வதி பரமேஸ்வரன் திருகல்யாண வைபம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.
இந்த யாகத்தில் கலந்துகொள்ளும் பக்தா்கள் பழம், பூஜைப் பொருள்கள், விடுபூக்கள், எலுமிச்சை உள்ளிட்ட பூஜைப் பொருள்களை கொண்டு வந்து வழிபடுலாம். இலவச தரிசன விழாவில் பங்கேற்க எவ்வித கட்டணமும் கிடையாது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்க உள்ளதாக கோயில் நிா்வாகி கே.டி. பழனிசாமி தெரிவித்தாா்.