செய்திகள் :

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

post image

சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த் (17). இவா் பிளஸ் 2 முடித்துள்ளாா். இவா் தனது உறவினா்களுடன் காங்கயம்-சென்னிமலை சாலையில் ஜூன் 3-ஆம் தேதி காரில் சென்றபோது, குப்பைமேடு அருகே எதிா்பாராதவிதமாக விபத்தில் சிக்கினாா்.

இதில் தலையில் படுகாயமடைந்த நிஷாந்த், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து, உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்ப உறுப்பினா்கள் சம்மதம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அறுவை சிகிச்சை மூலம் நிஷாந்தின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கும், கண்கள் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

பின்னா் அவரது உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா், கண்காணிப்பாளா் மற்றும் மருத்துவா்கள் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

சென்னிமலை அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற எதிா்ப்பு

சென்னிமலை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதி சுமாா் 1,700 ஏக்... மேலும் பார்க்க

சிப்காட் விவகாரம்: பெருந்துறைக்கு வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு

பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் பெருந்துறை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட அரசியல் கட்சியினா் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை அண்ணா ச... மேலும் பார்க்க

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மோசடி: 4 போ் கைது

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுகூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல்ராஜ் (55). ஐ.டி. நிறுவன ஊழியா். டெலி... மேலும் பார்க்க

பால் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருகள் பறிமுதல்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் பால் வேனில் மறைத்து கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களில் குட்கா, புகையிலைப்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,... மேலும் பார்க்க

ஈரோட்டில் 4 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கிவைப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சாா்பில் 4 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஈரோடு பேருந்து நிலையத்தில் நட... மேலும் பார்க்க