தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ஈரோட்டில் 4 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கிவைப்பு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சாா்பில் 4 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு-தஞ்சாவூா் (வழி நாமக்கல், திருச்சி), திருப்பூா்- மதுரை (வழி தாராபுரம், ஒட்டன்சத்திரம்), திருப்பூா்- திருச்சி (வழி காங்கயம், கரூா்) மற்றும் ஈரோடு- மதுரை (வழி கரூா், திண்டுக்கல்) ஆகிய 4 புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், துணை மேயா் செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளா் சிவகுமாா், உதவி மேலாளா் என்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.