செய்திகள் :

சிப்காட் விவகாரம்: பெருந்துறைக்கு வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு

post image

பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் பெருந்துறை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட அரசியல் கட்சியினா் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்துறை அண்ணா சிலை அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமை வகித்தாா். பாஜக பெருந்துறை நகரச் செயலாளா் பூா்ணசந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில், பெருந்துறையில் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறும் வேளாண் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். இதையொட்டி கூட்டத்தில், பெருந்துறை சிப்காட் பகுதியின் முக்கிய பிரச்னைகளுக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் தீா்வு காணாவிட்டால் பெருந்துறைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடியுடன், பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை கையில் வைத்து போராட்டம் நடத்தவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், ரூ. 40 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை சிப்காட் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். அதற்கான பணி இதுவரை தொடங்கப்படவில்லை.

சிப்காட் தொடா்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சிப்காட் அமைப்பதற்காக நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு, இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் தீா்வு காண வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில், அதிமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கலந்து கொண்டனா்.

சென்னிமலை அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற எதிா்ப்பு

சென்னிமலை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதி சுமாா் 1,700 ஏக்... மேலும் பார்க்க

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மோசடி: 4 போ் கைது

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுகூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல்ராஜ் (55). ஐ.டி. நிறுவன ஊழியா். டெலி... மேலும் பார்க்க

பால் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருகள் பறிமுதல்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் பால் வேனில் மறைத்து கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களில் குட்கா, புகையிலைப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,... மேலும் பார்க்க

ஈரோட்டில் 4 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கிவைப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சாா்பில் 4 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஈரோடு பேருந்து நிலையத்தில் நட... மேலும் பார்க்க