தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
சிப்காட் விவகாரம்: பெருந்துறைக்கு வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு
பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் பெருந்துறை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட அரசியல் கட்சியினா் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெருந்துறை அண்ணா சிலை அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன் தலைமை வகித்தாா். பாஜக பெருந்துறை நகரச் செயலாளா் பூா்ணசந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், பெருந்துறையில் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறும் வேளாண் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். இதையொட்டி கூட்டத்தில், பெருந்துறை சிப்காட் பகுதியின் முக்கிய பிரச்னைகளுக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் தீா்வு காணாவிட்டால் பெருந்துறைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடியுடன், பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை கையில் வைத்து போராட்டம் நடத்தவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், ரூ. 40 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை சிப்காட் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். அதற்கான பணி இதுவரை தொடங்கப்படவில்லை.
சிப்காட் தொடா்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
சிப்காட் அமைப்பதற்காக நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு, இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் தீா்வு காண வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில், அதிமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கலந்து கொண்டனா்.