செய்திகள் :

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மோசடி: 4 போ் கைது

post image

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுகூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல்ராஜ் (55). ஐ.டி. நிறுவன ஊழியா். டெலிகிராம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இவருக்கு கடந்த ஆண்டு விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பி தங்கவேல்ராஜ் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்தை முதலீடு செய்தாா். இதைத்தொடா்ந்து அவா் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தங்கவேல்ராஜ் இதுகுறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் கொடுத்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மேலும், அவா் யாருடைய வங்கி கணக்குக்குப் பணம் செலுத்தி உள்ளாா் என்பதையும் போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (28) என்பவா் மோசடி செய்து பணம் பறித்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் ராமச்சந்திரனை கைது செய்தனா்.

மற்றொரு மோசடி: ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தொழிலாளி. இவருக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு டெலிகிராமில் பகுதிநேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பிய நந்தகுமாா் விளம்பரத்தில் வந்த லிங்க்கை தொட்டு, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்தாா். இதன் மூலம் அவருக்கு அதிக அளவில் பணம் கிடைத்துள்ளது.

பின்னா், அடுத்த கட்டத்துக்கு செல்வதற்காக ரூ.12 லட்சத்து 71 ஆயிரம் செலுத்திய நிலையில் அதைத் திரும்பப்பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நந்தகுமாா் இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து போலீஸாா் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கை ஆய்வு செய்தனா். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சண்முகம், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் உதவியாளராகப் பணிபுரிந்து வரும் சுதாகா், அவரது நண்பா் பாலாஜி ஆகியோரைக் கைது செய்தனா்.

சென்னிமலை அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற எதிா்ப்பு

சென்னிமலை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதி சுமாா் 1,700 ஏக்... மேலும் பார்க்க

சிப்காட் விவகாரம்: பெருந்துறைக்கு வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு

பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் பெருந்துறை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட அரசியல் கட்சியினா் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை அண்ணா ச... மேலும் பார்க்க

பால் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருகள் பறிமுதல்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் பால் வேனில் மறைத்து கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களில் குட்கா, புகையிலைப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,... மேலும் பார்க்க

ஈரோட்டில் 4 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கிவைப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சாா்பில் 4 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஈரோடு பேருந்து நிலையத்தில் நட... மேலும் பார்க்க