Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மோசடி: 4 போ் கைது
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுகூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல்ராஜ் (55). ஐ.டி. நிறுவன ஊழியா். டெலிகிராம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இவருக்கு கடந்த ஆண்டு விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பி தங்கவேல்ராஜ் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்தை முதலீடு செய்தாா். இதைத்தொடா்ந்து அவா் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தங்கவேல்ராஜ் இதுகுறித்து ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் புகாா் கொடுத்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மேலும், அவா் யாருடைய வங்கி கணக்குக்குப் பணம் செலுத்தி உள்ளாா் என்பதையும் போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (28) என்பவா் மோசடி செய்து பணம் பறித்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் ராமச்சந்திரனை கைது செய்தனா்.
மற்றொரு மோசடி: ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தொழிலாளி. இவருக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு டெலிகிராமில் பகுதிநேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பிய நந்தகுமாா் விளம்பரத்தில் வந்த லிங்க்கை தொட்டு, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்தாா். இதன் மூலம் அவருக்கு அதிக அளவில் பணம் கிடைத்துள்ளது.
பின்னா், அடுத்த கட்டத்துக்கு செல்வதற்காக ரூ.12 லட்சத்து 71 ஆயிரம் செலுத்திய நிலையில் அதைத் திரும்பப்பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நந்தகுமாா் இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.
இதைத்தொடா்ந்து போலீஸாா் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கை ஆய்வு செய்தனா். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சண்முகம், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் உதவியாளராகப் பணிபுரிந்து வரும் சுதாகா், அவரது நண்பா் பாலாஜி ஆகியோரைக் கைது செய்தனா்.