Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பால் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருகள் பறிமுதல்
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் பால் வேனில் மறைத்து கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களில் குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கா்நாடகத்தில் இருந்து வந்த பால் வேனை நிறுத்தி சோதனையிட்டதில் பால் கேன்களுக்கு மத்தியில் 8 சாக்குப் பையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில் கா்நாடகத்தில் பால் விநியோகம் செய்வதுபோன்ற பால் வேனில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னா் கடத்தலுக்குப் பயன்படுத்திய பால் வேனை பறிமுதல் செய்த போலீஸாா் திருப்பூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் மனேஷ்குமாரைக் கைது செய்தனா்.