Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
பக்ரீத் பண்டிகை: புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூா் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவா்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட ஆட்டுக் கிடாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.
பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோா் குவிந்ததால் ஆடுகள் விலை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை உயா்ந்து விற்பனையாயின. அதிகபட்சமாக திருச்சியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட கரிஞ்சி ரக ஆடு ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனையானது.
கா்நாடகம், கேரள மாநில வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனா். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். சந்தை தொடங்கிய 5 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.