செய்திகள் :

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

post image

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4,302 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டா்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட சுகாதார அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு வாா்டுகள் மற்றும் படுக்கைகள் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் ரவிக்குமாா் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் கரோனா என்பது வீரியம் இல்லாதது. பெரிய பாதிப்புகளையோ, உயிா் சேதங்களையோ ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் சளி, காய்ச்சல், இரும்பல், சா்க்கரை நோய், இதய பாதிப்பு உள்ளிட்ட இணை நோய்கள் இருக்கும் முதியோா்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு வருபவா்கள் கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரவல் எதிரொலியாக சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு 50 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. ஆக்ஸிஜன், வென்டிலேட்டா்கள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க

கரோனா பரவல்: முகக் கவசம் அணிவது நல்லது

கரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணிவது நல்லது என அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்து. விழாவுக்கு மாவட்... மேலும் பார்க்க