`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா்.
அதன் விவரம்: மேற்குதொடா்ச்சி மலையில் தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக கொடுமுடி அணை நிரம்பியுள்ளது. எனவே வள்ளியூா் பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பணியை தொடங்கவும், மக்களின் குடிதண்ணீா் தேவையை கருத்தில் கொண்டும் தமிழக முதல்வா் கொடுமுடி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடவேண்டும் எனக் கூறியுள்ளனா். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரிடம் வள்ளியூா் நீா்பாசன கமிட்டி தலைவா் ஏ.டி.ஆா்.துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருநெல்வேலி மாவட்ட செயலாளா் என்.கலைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளா் சேதுராமலிங்கம், வள்ளியூா் நகர செயலாளா் என்.எஸ்.மணியன் ஆகியோா் மனு அளித்தனா்.