கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
திருச்சி அருகே அதவத்தூரில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.
திருச்சி மாவட்டம் அதவத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சி. அழகா்சாமி (36). ஸ்வீட் பலகார மாஸ்டா். இவரது மனைவி பானு (34). இருவரும் பைக்கில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அதவத்தூா் சக்தி நகா் 2 ஆவது குறுக்குத் தெரு அருகே அவா்கள் வந்தபோது, பின்புறம் பைக்கில் வந்த இரு மா்ம நபா்கள், பானு கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.