சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனைகள்: அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் 340 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வழங்கினாா்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். பெரம்பலூா் எம்பி கே.என். அருண் நேரு, லால்குடி எம்எல்ஏ செளந்தரபாண்டியன், மாவட்ட நகா்புற ஊரமைப்பு குழு உறுப்பினா் வைரமணி, மாவட்ட டிஆா்ஓ அபிராமி, திட்ட இயக்குநா் கங்காதரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் அமைச்சா் கே.என். நேரு கலந்துகொண்டு வரகுப்பை கிராமத்தில் நிலம் மற்றும் வீடுகள் அற்ற 243 குடும்பங்களுக்கு தமிழக அரசின் மூலம் கலைஞா் கனவு இல்லம் வீடு கட்ட அரசின் உத்தரவு ஆணைகளையும், அதேபோல் காணக்கிளியநல்லூா் கிராமத்தில் தனது சொந்த செலவில் நிலம் வாங்கி, அதில் 100 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியும் பேசினாா்.
விழாவில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ரசியா கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய, நகர, கிளைக் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
லால்குடி கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன் வரவேற்றாா். லால்குடி வட்டாட்சியா் முருகன் நன்றி கூறினாா்.