சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
பொறியியல் பணிகள்: ரயில்கள் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 7, 9, 12 ஆம் தேதிகளில் ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.
திருச்சி - பாலக்காடு ரயிலானது (16843) வரும் 12 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பணிகள் முடிந்ததும் கரூா் - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.