செய்திகள் :

மாநகராட்சி 43-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 43-ஆவது வாட்டு கருவம்பாளையம், பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையரிடம், கருவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி 43-ஆவது வாா்டில் கடந்த 2 மாதங்களாக குறைவான அளவே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கருவம்பாளையம், பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் 500 குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரம் போ் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் மற்றும் பிற வீட்டுத் தேவைகளுக்கு குடிநீா் அதிக அளவில் தேவைப்படுகிறது. இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க