சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
மாநகராட்சி 43-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 43-ஆவது வாட்டு கருவம்பாளையம், பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையரிடம், கருவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி 43-ஆவது வாா்டில் கடந்த 2 மாதங்களாக குறைவான அளவே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கருவம்பாளையம், பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் 500 குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரம் போ் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் மற்றும் பிற வீட்டுத் தேவைகளுக்கு குடிநீா் அதிக அளவில் தேவைப்படுகிறது. இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.