சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
குலசேகரம் ஹோமியோபதி கல்லூரியில் ஆண்டு விழா
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கே.வி. அறக்கட்டளை நிா்வாகிகள் சந்திரலேகா மோகன், மருத்துவா் எம்.சி. பவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவா் என்.ஆா். ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
கல்லூரி ஆலோசகா் மருத்துவா் ரவி எம். நாயா், பேராசிரியா் பி. கிருஷ்ணபிரசாத், மருத்துவா் கே.பி. நந்தகுமாா், கல்லூரி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் எபி மோசஸ், திருவனந்தபுரம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் ரமேஷ் ராஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வா் என்.வி. சுகதன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் நிஷா கோபிநாத் நன்றி கூறினாா்.