செய்திகள் :

நகைக்காக 4 வயது குழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள், கணவருக்கு 3 மாத சிறை

post image

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தில் நகைக்காக 4 வயது குழந்தையை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

குளச்சல் அருகேயுள்ள கடியப்பட்டினம் பகுதியை சோ்ந்தவா் ஜாண் ரிச்சா்ட். இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா் .இவரது மனைவி சகாய சில்ஜா இவா்களின் நான்கு வயது குழந்தை ஜோகின் ரிஷி கடந்த 21.1.2022 அன்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனது.

குழந்தையை காணாததால் தாயாா் சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா்வழக்குப்பதிந்து விசாரித்ததில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மீன்படி தொழிலாளியான சகாய சரோபின் என்ற சரோபின் (41), அவரது மனைவி பாத்திமா (35)ஆகியோருக்கு குழந்தை அணிந்திருந்த தங்க செயின், பிரேசல்ட், வெள்ளி அரைஞாண் ஆகியவற்றிற்காக குழந்தையை கொன்று பிரோவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அத்தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீஸாா், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி இராமசந்திரன், குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனையும், கொலைக்கான தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக கணவன் சரோபனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.

தக்கலை, மூலச்சல் வட்டாரத்தில் இன்றும், நாளையும் மின்தடை

தக்கலை, மூலச்சல் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மின்பாதை பகுதிகளில் முறையே வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 6, 7) மின்தடை ஏற்படும் என ... மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. வில்லுக்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் படகு கட்டணம் உயா்வு: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி விவேகானந்தா் பாறைக்கு செல்லும் படகு கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகு... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 10 லட்சம் அமைச்சா் வழங்கினாா்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகே மதிலகம்,... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.7.25 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

நாகா்கோவில் மாநகர பகுதியில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட வீராணி ஊா்ப்புற நூலகம் முன்பு மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, 18 ஆவது வாா்டு அனந்தன் நகா் அம்மன் கோயில் தெருவில் அலங்கார தரைக்கற்கள் அமைக்கும் பணி என ... மேலும் பார்க்க