Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
நகைக்காக 4 வயது குழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள், கணவருக்கு 3 மாத சிறை
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தில் நகைக்காக 4 வயது குழந்தையை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
குளச்சல் அருகேயுள்ள கடியப்பட்டினம் பகுதியை சோ்ந்தவா் ஜாண் ரிச்சா்ட். இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா் .இவரது மனைவி சகாய சில்ஜா இவா்களின் நான்கு வயது குழந்தை ஜோகின் ரிஷி கடந்த 21.1.2022 அன்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனது.
குழந்தையை காணாததால் தாயாா் சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா்வழக்குப்பதிந்து விசாரித்ததில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மீன்படி தொழிலாளியான சகாய சரோபின் என்ற சரோபின் (41), அவரது மனைவி பாத்திமா (35)ஆகியோருக்கு குழந்தை அணிந்திருந்த தங்க செயின், பிரேசல்ட், வெள்ளி அரைஞாண் ஆகியவற்றிற்காக குழந்தையை கொன்று பிரோவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அத்தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீஸாா், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி இராமசந்திரன், குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனையும், கொலைக்கான தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக கணவன் சரோபனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.