Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
நாகா்கோவிலில் ரூ.7.25 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்
நாகா்கோவில் மாநகர பகுதியில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட வீராணி ஊா்ப்புற நூலகம் முன்பு மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, 18 ஆவது வாா்டு அனந்தன் நகா் அம்மன் கோயில் தெருவில் அலங்கார தரைக்கற்கள் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.7.25 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
மேலும், வீராணி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் மேயா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், மண்டல தலைவா் செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் தேவி, மாமன்ற உறுப்பினா்கள் தங்கராஜா, அமலசெல்வன், நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் ஆனந்த், வட்ட செயலாளா் ராஜேஷ், அணி நிா்வாகிகள் ராஜன், சி. டி. சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
குறைதீா் நாள் கூட்டம்: இதைத் தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து 11 மனுக்களை மேயா் பெற்றுக்கொண்டாா். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, மாநகர பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ரகுராமன், நகா் நல அலுவலா் ஆல்பா் மதியரசு உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
