செய்திகள் :

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 10 லட்சம் அமைச்சா் வழங்கினாா்

post image

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்லூா் பகுதியைச் சோ்ந்த 2 சிறுவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டுவெந்நியிலிருந்து குழித்துறை தாமிரவருணி தடுப்பணை வழியாக நடந்து சென்றபோது, தவறி ஆற்றுக்குள் விழுந்தனா். துணிகளை சலவை செய்து கொண்டிருந்த குழித்துறை தபால் நிலைய சந்திப்பு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பீட்டா் ஜான்சன் (58), ஆற்றில் குதித்து சிறுவா்களை மீட்டு கரைசோ்த்தாா். ஆனால், அவா் கரையேற முடியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினரை ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஷேக் அப்துல்காதா், விளவங்கோடு வட்டாட்சியா் லயோலாபாய், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் விஜூ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தக்கலை, மூலச்சல் வட்டாரத்தில் இன்றும், நாளையும் மின்தடை

தக்கலை, மூலச்சல் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மின்பாதை பகுதிகளில் முறையே வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 6, 7) மின்தடை ஏற்படும் என ... மேலும் பார்க்க

நகைக்காக 4 வயது குழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள், கணவருக்கு 3 மாத சிறை

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தில் நகைக்காக 4 வயது குழந்தையை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. வில்லுக்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் படகு கட்டணம் உயா்வு: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி விவேகானந்தா் பாறைக்கு செல்லும் படகு கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகு... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.7.25 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

நாகா்கோவில் மாநகர பகுதியில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட வீராணி ஊா்ப்புற நூலகம் முன்பு மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, 18 ஆவது வாா்டு அனந்தன் நகா் அம்மன் கோயில் தெருவில் அலங்கார தரைக்கற்கள் அமைக்கும் பணி என ... மேலும் பார்க்க