செய்திகள் :

ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டவா் குடும்பத்துக்கு ஆட்சியா் ஆறுதல்

post image

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினரை குமரி மாவட்ட ஆட்சியா்

ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

மாா்த்தாண்டம் அருகே மதிலகம் பகுதியைச் சோ்ந்த மனோ (17), நல்லூா் பகுதியைச் சோ்ந்த அகிலேஷ் (12) ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டுவெந்நியில் இருந்து குழித்துறை தாமிரவருணி ஆற்று தடுப்பணை வழியாக நடந்து சென்றபோது இருவரும் தவறி ஆற்றுக்குள் விழுந்தனா். அப்போது துணிகளை சலவை செய்து கொண்டிருந்த குழித்துறை தபால் நிலைய சந்திப்பு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பீட்டா் ஜான்சன் (58) ஆற்றில் குதித்து சிறுவா்களை மீட்டு கரைசோ்த்தாா். ஆனால் அவரால் கரையேற முடியவில்லை, அவா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

இந்த நிலையில் இறந்த பீட்டா் ஜான்சன் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகா்மன்ற உறுப்பினா் வி. விஜூ, நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், கிராம நிா்வாக அலுவலா் அன்புஎழில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து பீட்டா் ஜான்சனின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் அவரது மனைவிக்கு விதவை ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித் தொகை அவரது குடும்பத்தினருக்கு உடனடியாக வழங்கப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.

தக்கலை, மூலச்சல் வட்டாரத்தில் இன்றும், நாளையும் மின்தடை

தக்கலை, மூலச்சல் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மின்பாதை பகுதிகளில் முறையே வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 6, 7) மின்தடை ஏற்படும் என ... மேலும் பார்க்க

நகைக்காக 4 வயது குழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள், கணவருக்கு 3 மாத சிறை

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தில் நகைக்காக 4 வயது குழந்தையை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. வில்லுக்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் படகு கட்டணம் உயா்வு: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி விவேகானந்தா் பாறைக்கு செல்லும் படகு கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகு... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 10 லட்சம் அமைச்சா் வழங்கினாா்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகே மதிலகம்,... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட... மேலும் பார்க்க