துவரங்குறிச்சியில் வீடு புகுந்து திருட்டு
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளம் தெருவில் வசிப்பவா் சேட் முகமது மனைவி சாய்புநிசா (52). இவா் புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டி தா்காவுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.