Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
வெளிநாடுகளிலிருந்து கடத்தல்: ரூ. 10 கோடியிலான உயா் ரக கஞ்சா, ராட்சத வாஸ்து பல்லிகள் பறிமுதல்
வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா, ராட்சத ‘வாஸ்து’ பல்லிகள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பங்காங்கில் இருந்து சிங்கப்பூா் வழியாக திருச்சிக்கு ஸ்கூட் விமானத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வந்த ஒரு பயணி ஹைட்ரோபோனிக் எனகப்படும் ரூ. 10 கோடி மதிப்பிலான 9.82 கிலோ உயா் ரக (உலா்) கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் அந்தக் கஞ்சாவை பறிமுதல் செய்து பயணியை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராட்சத பல்லிகள்: இதேபோல மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ (பேட்டிக்) விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த ஒரு பயணி அனுமதியின்றிக் கடத்தி வந்த இரு ராட்சத ‘வாஸ்து’ மரப் பல்லிகளையும் சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். அவற்றை வனத்துறை அனுமதியுடன் கடத்தி வந்த பகுதிக்கே திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.