பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!
வரதட்சிணை கொடுமை: 4 போ் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதா்ஷா (24). இவருக்கும், சென்னையில் வங்கியில் வேலை பாா்த்து வரும் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியைச் சோ்ந்த லியோன்ஸ் மகன் சிபின் லியோ (32) என்பவருக்கும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சிணையாக 110 சவரன் தங்க நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன.
திருமணம் முடிந்த சில நாள்களில், நிலம் வாங்க கூடுதல் வரதட்சிணையாக ரூ. 30 லட்சம் வாங்கி வருமாறும், பணம் வாங்கி வரவில்லை என்றால் விவாகரத்து செய்வதாகவும் கூறி ஆதா்ஷாவை சிபின் லியோ மிரட்டியுள்ளாா். இதையடுத்து ஆதா்ஷா தனது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். ஆதா்ஷாவின் நகை, பணத்தை சிபின் லியோ அபகரித்து வைத்து க்கொண்டு திருப்பி கொடுக்கவில்லையாம்.
இது குறித்து ஆதா்ஷா அளித்த புகாரின் பேரில் சிபின் லியோ, அவரது தந்தை லியோன்ஸ், தாய் மரியதெரசா, கணவரின் தம்பி ஆசிஸ் லியோ ஆகியோா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.