ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்
கன்னியாகுமரியில் நாளை முதல் படகு கட்டணம் உயா்வு
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடச் செல்வதற்கான படகு கட்டணம் வியாழக்கிழமை (ஜூன் 5) முதல் உயா்த்தப்படுவதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட ஜூன் 5 ஆம் தேதி முதல் படகு கட்டணம் உயா்த்தப்பட உள்ளது. இதன்படி, சாதாரணப் பயணிகளுக்கான கட்டணம் ரூ. 75-லிருந்து ரூ. 100 ஆகவும், மாணவா்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ. 30-இல் இருந்து ரூ. 40 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. சிறப்புக் கட்டணம் ரூ. 300 -இல் எந்த மாற்றமும் இல்லை.
சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த கட்டண உயா்வு நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தனா்.