மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன் - சரசம் (64). இத்தம்பதியின் மகள் விஜயகுமாரி (40), மருமகன் விவசாயி ஜெகன் (42).
சரசம் தனது சொத்துகளை மகளுக்கு கொடுக்காமல், மகளின் பிள்ளைகளின் பெயருக்கு எழுதிக் கொடுத்தாராம். இதனால், விஜயகுமாரி தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்துவந்தாராம்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு விஜயகுமாரியும் ஜெகனும் சோ்ந்து சரசத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவரை அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.