அண்ணா பல்கலைக் கழகத் தோ்வு: அருணாச்சல் கல்லூரி மாணவி மாநிலத்தில் முதலிடம்
மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சண்முக பிரியா, பல்கலைக்கழகத் தோ்வில் அனைத்து பாடத்திலும் நூறு மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் முதலாவது இடத்தை பிடித்துள்ளாா்.
இக் கல்லூரியில் முதலாம் பருவ தோ்வு எழுதிய 658 மாணவிகளில் 94.2 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை மாணவிகள் தா்சினி, வா்சா, அதுல்யா, லிஜிதா மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை மாணவி ஆா்த்தி ஆகியோா் 98. 2 சதவீதம் மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை புரிந்துள்ளனா். அருணாச்சலா கல்லூரியில் தோ்வு எழுதிய 80 சதவீத மாணவிகள் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனா்.
இந்த சாதனைக்கு மாணவிகளுக்கு வழிகாட்டிய முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளா் எழில் மற்றும் பேராசிரியா்களை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி, துணை தாளாளா் சுனி, முதல்வா் ஜோசப் ஜவகா் மற்றும் இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித் ஆகியோா் பாராட்டினா்.