Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
காவல் துறை ஆலோசனையை புறக்கணித்து அவசர கதியில் நடத்தப்பட்டதா வெற்றிப் பேரணி?
காவல் துறையின் ஆலோசனையை புறக்கணித்துவிட்டு அவசர கதியில் வெற்றிப் பேரணி நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பெங்களூரு அணி முதல்முறையாக ஐபில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், கர்நாடக பேரவை வளாகத்துக்கு முன்னர் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியதாலும், சின்னசாமி திடலில் ஆரவாரத்துடன் அத்துமீறி நுழைய முயன்ற ரசிகர்களை தடுத்த காவல் துறை தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதில் லேசான தடியடி நடத்தப்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி, ஒன்றுமறியாத 11 பேர் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர்.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவசர அவசரமாக பாராட்டு விழாவுக்கு அனுமதியளித்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றது. பெங்களூரு அணி வெற்றிபெற்றதும் கர்நாடக அரசு புதன்கிழமை பாராட்டு விழா மற்றும் பேரணிக்கு ஏற்பாடுகளைத் தொடர்ந்தது.
இரவில் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் தீபாவளி போல தொடர்ந்ததால் போலீஸார் கண் விழித்துப் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி பாதுகாப்புப் பணிகள் ஜூன் 4 ஆம் தேதி இரவு வரை இருந்தது.
இதனால், பாராட்டு விழாவை ஞாயிற்றுக்கிழமையான ஜூன் 8 ஆம் தேதி நடத்திக் கொள்ள காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கர்நாடக அரசு முற்றிலுமாக மறுத்துவிட்டு அவசர கதியில் நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலை நாள் அல்லாத ஞாயிற்றுக்கிழமையில் பாராட்டு விழா நடத்தினால், முறையான ஏற்பாடுகளை நடத்துவதற்கும், தடுப்புகள் அமைத்து போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் இருக்கும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏராளமான பிரச்சினைகள் இருந்தபோதிலும், பாராட்டு விழா நடத்துவதிலேயே கர்நாடக அரசு உறுதியாக இருந்துள்ளது. இதுவே பல்வேறு உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளது.
இதையும் படிக்க | பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு