செய்திகள் :

காவல் துறை ஆலோசனையை புறக்கணித்து அவசர கதியில் நடத்தப்பட்டதா வெற்றிப் பேரணி?

post image

காவல் துறையின் ஆலோசனையை புறக்கணித்துவிட்டு அவசர கதியில் வெற்றிப் பேரணி நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெங்களூரு அணி முதல்முறையாக ஐபில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், கர்நாடக பேரவை வளாகத்துக்கு முன்னர் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியதாலும், சின்னசாமி திடலில் ஆரவாரத்துடன் அத்துமீறி நுழைய முயன்ற ரசிகர்களை தடுத்த காவல் துறை தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதில் லேசான தடியடி நடத்தப்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி, ஒன்றுமறியாத 11 பேர் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர்.

இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவசர அவசரமாக பாராட்டு விழாவுக்கு அனுமதியளித்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றது. பெங்களூரு அணி வெற்றிபெற்றதும் கர்நாடக அரசு புதன்கிழமை பாராட்டு விழா மற்றும் பேரணிக்கு ஏற்பாடுகளைத் தொடர்ந்தது.

இரவில் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் தீபாவளி போல தொடர்ந்ததால் போலீஸார் கண் விழித்துப் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி பாதுகாப்புப் பணிகள் ஜூன் 4 ஆம் தேதி இரவு வரை இருந்தது.

இதனால், பாராட்டு விழாவை ஞாயிற்றுக்கிழமையான ஜூன் 8 ஆம் தேதி நடத்திக் கொள்ள காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கர்நாடக அரசு முற்றிலுமாக மறுத்துவிட்டு அவசர கதியில் நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலை நாள் அல்லாத ஞாயிற்றுக்கிழமையில் பாராட்டு விழா நடத்தினால், முறையான ஏற்பாடுகளை நடத்துவதற்கும், தடுப்புகள் அமைத்து போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் இருக்கும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏராளமான பிரச்சினைகள் இருந்தபோதிலும், பாராட்டு விழா நடத்துவதிலேயே கர்நாடக அரசு உறுதியாக இருந்துள்ளது. இதுவே பல்வேறு உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளது.

இதையும் படிக்க | பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க