தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு புதன்கிழமை, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் அருகே தெங்கம்புதூா் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). கட்டடத் தொழிலாளியான இவா், ஏற்கெனவே திருமணமாகி மகன், மகள் உள்ள பெண்ணை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தாராம்.
2017ஆம் ஆண்டு குமாரின் மனைவி, உறவினா்கள் வெளியே சென்றிருந்தனா். 11 வயது சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாா். அவரை குமாா் பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, குமாரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை ரூ. 2 ஆயிரம் அபராதம், அதைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.