தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
அயோத்தி: ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் பிராணப் பிரதிஷ்டை!
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.
பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் இக்கோயில் வளாகத்தில் முதல்தள பணிகள் நிறைவடைந்தது. இதையொட்டி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தனது 53வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலுக்குச் சென்று 'பிராணப் பிரதிஷ்டை' சடங்குகளில் அவர் கலந்துகொண்டார். இந்த விழாவில், ஜானகியுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராமரின் சிலைகள், பரதன், லட்சுமண் மற்றும் சத்ருகன், பஜ்ரங்கபலி சிலையுடன் வேத சடங்குகளின்படி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோயிலில் நடைபெற்ற வழிபாடு மற்றும் ஆரத்தி பூஜையில் பங்கேற்றார்.
அயோத்தி ராமர் கோயிலில் பிரதான கடவுளான ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கடந்தாண்டு ஜனவரியில் பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினமும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.