PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு
நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா்.
மாா்த்தாண்டம் சந்திப்பில் இருந்து சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக- கேரள அரசுப் பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பேருந்து நிலையம் வரும் பயணிகள் திருவனந்தபுரம் செல்ல மாற்றுப் பேருந்தில் மாா்த்தாண்டம் சந்திப்புக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம், இதுகுறித்து குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி வேண்டுகோள் வைத்தாா்.
இதையடுத்து திருவனந்தபுரம் செல்லும் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்து செல்ல அமைச்சா் அறிவுறுத்தினாா்.
இதன்படி, நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்தது. விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து இப்பேருந்து சேவையை துவக்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, போக்குவரத்துக் கழக மாா்த்தாண்டம் கிளை மேலாளா் ஸ்டாலின், நகா்மன்ற உறுப்பினா்கள் சா்தாா்ஷா, ஜெயந்தி, விஜயலெட்சுமி, ரோஸ்லெட், லில்லி புஷ்பம், ரீகன், அருள்ராஜ், மினிகுமாரி, லலிதா மற்றும் மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தினகா், தமிழ்நாடு வா்த்தக சங்க பேரவை துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.