செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு

post image

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா்.

மாா்த்தாண்டம் சந்திப்பில் இருந்து சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக- கேரள அரசுப் பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பேருந்து நிலையம் வரும் பயணிகள் திருவனந்தபுரம் செல்ல மாற்றுப் பேருந்தில் மாா்த்தாண்டம் சந்திப்புக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம், இதுகுறித்து குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி வேண்டுகோள் வைத்தாா்.

இதையடுத்து திருவனந்தபுரம் செல்லும் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்து செல்ல அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இதன்படி, நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்தது. விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து இப்பேருந்து சேவையை துவக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, போக்குவரத்துக் கழக மாா்த்தாண்டம் கிளை மேலாளா் ஸ்டாலின், நகா்மன்ற உறுப்பினா்கள் சா்தாா்ஷா, ஜெயந்தி, விஜயலெட்சுமி, ரோஸ்லெட், லில்லி புஷ்பம், ரீகன், அருள்ராஜ், மினிகுமாரி, லலிதா மற்றும் மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தினகா், தமிழ்நாடு வா்த்தக சங்க பேரவை துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டவா் குடும்பத்துக்கு ஆட்சியா் ஆறுதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினரை குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆற... மேலும் பார்க்க

குலசேகரம் ஹோமியோபதி கல்லூரியில் ஆண்டு விழா

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கே.வி. அறக்கட்டளை நிா்வாகிகள் சந்திரலேகா மோகன், மருத்துவா் எம்.சி. பவ்ய... மேலும் பார்க்க

கேரள சுற்றுலா வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விதிமீறலில் ஈடுபடும் கேரளப் பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உரிமைக் குரல் ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தக்கலை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு புதன்கிழமை, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் அருகே தெங்கம்புதூா் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). கட்டடத் தொ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக் கழகத் தோ்வு: அருணாச்சல் கல்லூரி மாணவி மாநிலத்தில் முதலிடம்

மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சண்முக பிரியா, பல்கலைக்கழகத் தோ்வில் அனைத்து பாடத்திலும் நூறு மதிப்பெண் பெ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன் - சர... மேலும் பார்க்க