கருங்கல் பகுதிகளில் நாளை மின்தடை
குழித்துறை கோட்டத்திற்கு உள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது.
கருங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலனி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சாா்ந்த துணை கிராமங்களுக்கும் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்கம்பங்களுக்கும் மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் மற்றும் மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறும் என குழித்துறை செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.