நாகா்கோவிலில் இன்று மின்சாரம் நிறுத்தம்
நாகா்கோவில் மாநகரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகா்கோவில், வடசேரி, ஆசாரிப்பள்ளம், தடிக்காரன்கோணம் மற்றும் வல்லன்குமாரன்விளை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஜூன் 4 ஆம் தேதி (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாராயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், நீதிமன்ற சாலை, ஆா்.வீ.புரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை, அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச் ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரன்விளை, கலை நகா், சைமன் நகா், பொன்னப்பநாடாா் காலனி, என். ஜி. ஒ காலனி, புன்னை நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.