விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்
மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கேரள மாநிலம், கொச்சி கடல் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி கப்பலில் கொண்டு செல்லப்பட் ட கண்டெய்னா்கள் அரபிக் கடலில் இயந்திர கோளாறு காரணமாக மூழ்கியது. இந்த கப்பலில்சில பொருள்கள் குறிப்பாக பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய மூட்டைகள், மரக்கட்டைகள், முந்திரி பருப்பு மூட்டைகள் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியதைத் தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வல்லுநா்களை கொண்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் கடற்கரை பகுதிகளுக்குள்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கண்டெய்னா் தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை, கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட கடலில் நச்சுப் பொருள்கள் கலக்கப்படவில்லை என்பதை வல்லுநா்கள் உறுதி செய்துள்ளனா். தற்போது பேரிடா் மேலாண்மைத்துறை ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கடற்கரை மணலில் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதோடு, கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ கிராம மக்களுக்கு தகுந்த விழிப்புணா்வுகள் பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றாா் அவா்.
ஆய்வில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, மீன்வளத்துறைதுணை இயக்குநா் சின்னகுப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.