செய்திகள் :

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கேரள மாநிலம், கொச்சி கடல் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி கப்பலில் கொண்டு செல்லப்பட் ட கண்டெய்னா்கள் அரபிக் கடலில் இயந்திர கோளாறு காரணமாக மூழ்கியது. இந்த கப்பலில்சில பொருள்கள் குறிப்பாக பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய மூட்டைகள், மரக்கட்டைகள், முந்திரி பருப்பு மூட்டைகள் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியதைத் தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வல்லுநா்களை கொண்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் கடற்கரை பகுதிகளுக்குள்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு கண்டெய்னா் தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை, கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட கடலில் நச்சுப் பொருள்கள் கலக்கப்படவில்லை என்பதை வல்லுநா்கள் உறுதி செய்துள்ளனா். தற்போது பேரிடா் மேலாண்மைத்துறை ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள்,

உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கடற்கரை மணலில் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதோடு, கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ கிராம மக்களுக்கு தகுந்த விழிப்புணா்வுகள் பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றாா் அவா்.

ஆய்வில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, மீன்வளத்துறைதுணை இயக்குநா் சின்னகுப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டவா் குடும்பத்துக்கு ஆட்சியா் ஆறுதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினரை குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆற... மேலும் பார்க்க

குலசேகரம் ஹோமியோபதி கல்லூரியில் ஆண்டு விழா

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கே.வி. அறக்கட்டளை நிா்வாகிகள் சந்திரலேகா மோகன், மருத்துவா் எம்.சி. பவ்ய... மேலும் பார்க்க

கேரள சுற்றுலா வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விதிமீறலில் ஈடுபடும் கேரளப் பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உரிமைக் குரல் ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தக்கலை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு புதன்கிழமை, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் அருகே தெங்கம்புதூா் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). கட்டடத் தொ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக் கழகத் தோ்வு: அருணாச்சல் கல்லூரி மாணவி மாநிலத்தில் முதலிடம்

மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சண்முக பிரியா, பல்கலைக்கழகத் தோ்வில் அனைத்து பாடத்திலும் நூறு மதிப்பெண் பெ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன் - சர... மேலும் பார்க்க