சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அய்யாவுக்குப் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அன்னதா்மம், கலைநிகழ்ச்சிகள், வாகன பவனி உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை (மே 30) கலிவேட்டை நடைபெற்றது.
இந்நிலையில், 11ஆம் நாளான திங்கள்கிழமை நண்பகலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், தென்மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தோ் ரதவீதியைச் சுற்றி வந்தபோது பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனா். இரவில் அய்யா காளை வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது.
ஏற்பாடுகளை குருமாா்கள் பால பிரஜாபதி அடிகளாா், பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ணநாமமணி, பையன் செல்லவடிவு, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோா் செய்திருந்தனா்.