செய்திகள் :

பொறியியல் சேர்க்கை: 2.81 பேர் விண்ணப்பம்!

post image

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று வரை 2,81,266மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-

கடந்த மே 7-ல் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. இன்று(ஜூன் 2) மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

இதில் 1,20,807 மாணவர்களும் 1,00,579 மாணவிகளும் ஆக மொத்தம் 2,21,386 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். 

தமிழகத்தில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கேற்பவும், 12 பாடப்பிரிவுகள் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளன.

இதனால் அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள். 

ஜூன் 6 வரை விண்ணப்பப் பதிவு செய்ய காலம் உள்ளதால் மாணாக்கர்கள் www.tneaonline.orgஎன்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு  செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பரந்தூர் விமான நிலையத்துக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வ... மேலும் பார்க்க

பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரம் இல்லை என்பதால் தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ் காந்த... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு!

மேட்டூர்: தமிழ்நாடு முதலமைச்சர் வருகை காரணமாக இன்று காலை மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு செய்தார்.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்... மேலும் பார்க்க

கல்வி விருது: 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்!

பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில... மேலும் பார்க்க

எஸ்பிபி பிறந்தநாள்: நினைவிடத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த் தொற... மேலும் பார்க்க

துணைவேந்தர்கள் நியமன திருத்தச் சட்டத்துக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

நமது சிறப்பு நிருபர்தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க