செய்திகள் :

பிரியாணியும் பொரிச்ச கோழியும்.. சிறுவன் ஆசை நிறைவேறியது! கேரள அங்கன்வாடி மெனு மாற்றம்!!

post image

திருவனந்தபுரம்: குழந்தைகள் ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு கேட்கும் அழகே அழகு. அதுவும் உணவுபொருளாக இருந்துவிட்டால் தனி அழகுதான். அப்படித்தான், கேரள அங்கன்வாடி மைய சிறுவன் பிரியாணியும், பொரிச்ச கோழியும் கேட்ட விடியோவும் அமைந்திருந்தது.

ஏற்கனவே தமிழகத்தில் எனக்கு பசிக்கும்ல.. என சிறுவன் கூறும் விடியோ எவ்வாறு வைரலாகியிருந்ததோ அதுபோல, அங்கன்வாடி மையத்தில் உப்புமா சாப்பிட்டுக் கொண்டே, அங்கன்வாடிகளில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி கொடுக்கலாமே என்று சிறுவன் கேட்பதும், என்ன வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர் கேட்டதும், அந்தக் குழந்தையும் மிக அழகாக பிரியாணியும், பொரிச்ச கோழியும் உப்புமாவுக்கு பதிலாக வேண்டும் என்று சொல்லும் விடியோ வைரலாகியிருந்தது.

இந்த விடியோ வைரலாகி 3 மாத காலத்தில், உண்மையிலேயே அங்கன்வாடி மையங்களின் உணவு மெனுவில், பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விடியோ உலகம் முழுவதும் சென்ற நிலையில், அது கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணிலும் பட்டிருக்கிறது.

கேரள சிறுவனின் விடியோவால் அங்கன்வாடி மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி, புலாவ், பருப்புப் பாயாசம், சோயா கரி, தானிய லட்டு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி குழந்தையின் மழலைப் பேச்சுக்கு தற்போது வாழ்த்துகளும் பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்து வருகிறது. அது மட்டுமா, குழந்தையின் கோரிக்கையை ஏற்று மெனுவில் மாற்றம் கொண்டு வந்த கேரள அரசுக்கும்தான்.

ஏற்கனவே அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாதாரண உப்புமா போன்ற உணவுகளை மாற்றிவிட்டு, ருசியான அதே வேளையில் உடலுக்கு சத்தான உணவுகளைக் கொண்டு வரும் திட்டத்தை வீணா ஜார்ஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற உணவுகள் அங்கன்வாடி மையங்களில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறுகிறார்.

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு... மேலும் பார்க்க

பிஜு ஜனதா தளம் முன்னாள் எம்.பி.யுடன் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா திருமணம்

பிஜு ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி.யும் மூத்த வழக்குரைஞரமான பினாகி மிஸ்ராவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் ஜொ்மனியில் திருமணம் செய்துகொண்டனா். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் மக்களவ... மேலும் பார்க்க