பறக்கும் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: தெற்கு...
பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம்: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரம் இல்லை என்பதால் தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ் காந்தி நகரில் ரூ.18.41 கோடி மதிப்பில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, அமைச்சர் அன்பில் மகேஸ் இணைந்து திறந்துவைத்தனர்.
"நவீன கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்களுடன் பல்கலைக்கழக வளாகத்திற்கு இணையாக இப்பள்ளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறப்பான கற்றல் சூழலில் பயிலவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், கற்பிக்கவுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பள்ளி கட்டிட திறப்பு நிகழ்ச்சியை பெரும் விழாவாக ஒருங்கிணைத்த மாநகராட்சி அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், ஊர் மக்களுக்கும் நன்றிகள்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருள்களை அமைச்சர்கள் வழங்கிய நிலையில் பள்ளி மாணவர்கள் மல்லர் கம்பம் ஏறுதல் நிகழ்வை நடத்திக்காட்டினர்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,
"தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ஐஆர்சிடிசி!