செய்திகள் :

பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம்: அமைச்சர் தகவல்

post image

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரம் இல்லை என்பதால் தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ் காந்தி நகரில் ரூ.18.41 கோடி மதிப்பில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, அமைச்சர் அன்பில் மகேஸ் இணைந்து திறந்துவைத்தனர்.

"நவீன கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்களுடன் பல்கலைக்கழக வளாகத்திற்கு இணையாக இப்பள்ளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறப்பான கற்றல் சூழலில் பயிலவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், கற்பிக்கவுள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

பள்ளி கட்டிட திறப்பு நிகழ்ச்சியை பெரும் விழாவாக ஒருங்கிணைத்த மாநகராட்சி அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், ஊர் மக்களுக்கும் நன்றிகள்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருள்களை அமைச்சர்கள் வழங்கிய நிலையில் பள்ளி மாணவர்கள் மல்லர் கம்பம் ஏறுதல் நிகழ்வை நடத்திக்காட்டினர்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,

"தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ஐஆர்சிடிசி!

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்: நிகழாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் இல்லை

தமிழகத்தில் நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் புதிய இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு உள்ள 11,... மேலும் பார்க்க