செய்திகள் :

ம.பி.யில் திருமண விழாவிற்குச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

post image

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி வேன் மீது மோதியதில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் கல்யாண்புரா காவல் நிலையத்துக்குள்பட்ட சஜெலி ரயில்வே கிராசிங்கில் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேனில் பயணித்த இருவர் உயிர் தப்பினர். ஆனால் பலத்த காயம் அடைந்தனர்.

வழக்கமாகச் செல்லும் மேம்பாலம் சாலை கட்டுமானத்தில் உள்ளது. இதன் விளைவாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. லாரி தாண்ட்லாவிலிருந்து ஜாபுவாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த வேனில் மோதியது. சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர் என்று ஜாபுவாவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் லால் குர்வே தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் மன்புரா கிராமத்திலிருந்து திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாக அந்த அதிகாரி கூறினார். உயிரிழந்தவர்கள் முகேஷ் கபேத் (40), அவரது மனைவி ஷாவ்லி (35), மகன் வினோத் (16), மகள் பயல் (12), ஒரே குடும்பத்தையும், மதி பாம்னியா (38), விஜய் பாம்னியா (14), காந்தா பாம்னியா (14), ராகினி பாம்னியா (9), ஜக்லி பர்மர் (35) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேனில் பயணித்தவர்களில் ஒரு இளம்பெண், குழந்தை உயிர் பிழைத்தனர். காயமடைந்தவர்கள் பாயல் பர்மர் (5), மற்றும் ஆஷு பாம்னியா (35) ஆகியோர் சிகிச்சைக்காக தஹோத் மற்றும் தாண்ட்லா மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். வேனிலிருந்த அனைத்து பயணிகளும் மேக்நகர் தாலுகாவில் உள்ள ஷிவ்கர் மஹுதாவைச் சேர்ந்தவர்கள்.

ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். தலைமறைவான ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த சோகம் அங்கு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றன.

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு... மேலும் பார்க்க

பிஜு ஜனதா தளம் முன்னாள் எம்.பி.யுடன் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா திருமணம்

பிஜு ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி.யும் மூத்த வழக்குரைஞரமான பினாகி மிஸ்ராவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் ஜொ்மனியில் திருமணம் செய்துகொண்டனா். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் மக்களவ... மேலும் பார்க்க