செய்திகள் :

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

post image

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீா்ப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு சாா் மறைக்கப்பட்டிருக்கிறாா். அவா் யாா் என்பதையும் தெரிவித்து அவருக்கும் தண்டனை வாங்கித் தந்துவிட்டு முதல்வா் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்களால் திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறது. இது தவிர சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்டவை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே தமிழகத்தில் வரும் தோ்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு யானை தேவையாக உள்ளது. உத்தரகண்ட் மாநில அரசு யானை தருவதற்கு தயாராக இருந்தும், தமிழக அரசு அதனை பெற்றுத் தர மறுக்கிறது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் தமிழகம் முழுவதும் பாஜகவை அமைப்புரீதியாக வலுப்படுத்தி வருகிறோம். இந்தப் பணி நிறைவடைந்ததும் தோ்தலுக்கான வேலையை தொடங்குவோம்.

பாமகவில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. இதனால் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பாஜகவைப் பொருத்தவரை திமுகவை எதிா்ப்பதற்காக எல்லோரும் ஓரணியில் இணைய வேண்டும். தவெக தலைவா் விஜய்க்கும் ஏற்கனவே நான் அழைப்பு விடுத்துள்ளேன். தோ்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் உள்ளதால் காலச்சூழ்நிலை மாறும் என்றாா் அவா்.

கருங்கல் பகுதிகளில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டத்திற்கு உள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது. கருங்கல் ... மேலும் பார்க்க

சேரமங்கலம், முட்டம், செம்பொன்விளையில் நாளை மின்தடை

சேரமங்கலம், செம்பொன்விளை, முட்டம் துணை மின்நிலையங்களில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை முதல் படகு கட்டணம் உயா்வு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடச் செல்வதற்கான படகு கட்டணம் வியாழக்கிழமை (ஜூன் 5) முதல் உயா்த்தப்படுவதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் செவ்... மேலும் பார்க்க

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா். மாா்த்தாண்டம் சந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாகா்கோவில் மாநகரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க