செய்திகள் :

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு! - முதல்வர் பெருமிதம்

post image

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு நடைபெற்றதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை - மேலூர் சாலை, உத்தங்குடியில் நேற்று (ஜூன் 1) திமுக பொதுக்குழுக் கூட்டம் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுக் குழுவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், முக்கிய சாலைகள் வழியாக சுமார் 25 கி.மீ. துரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். இதில் உற்சாகமாக கலந்துகொண்ட முதல்வருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து மதுரை முதல் மேயர் முத்துவின் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

இந்தப் பொதுக் குழு குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொண்டர்கள் பலருக்கு மடல்களையும் எழுதியுள்ளார்.

அந்தப் பதிவில், “பொதுக் குழுவா? கழக மாநாடா? என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது திமுக பொதுக்குழு! கலைஞர் 102-ஐச் செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்!

தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம் 2026-இல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

அவர் எழுதியுள்ள வாழ்த்து மடலில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கழக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது.

மண்ணுக்கே உரிய கோலாகலத்துடன் 'பொதுக்குழுவா கழக மாநாடா!' என்று பிரமிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாக நடந்தேறியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்: மு.க. ஸ்டாலின்

இந்தியாவின் தேசிய மொழி குறித்து ஸ்பெயினில் கனிமொழி பேசியதற்கு பெருமைகொள்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவா... மேலும் பார்க்க

பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பரந்தூர் விமான நிலையத்துக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வ... மேலும் பார்க்க

பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக்கவசம்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரம் இல்லை என்பதால் தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ் காந்த... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு!

மேட்டூர்: தமிழ்நாடு முதலமைச்சர் வருகை காரணமாக இன்று காலை மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு செய்தார்.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்... மேலும் பார்க்க