செய்திகள் :

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்: மு.க. ஸ்டாலின்

post image

இந்தியாவின் தேசிய மொழி குறித்து ஸ்பெயினில் கனிமொழி பேசியதற்கு பெருமைகொள்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் தருவதற்கு மத்திய அரசு சார்பில் எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஸ்பெயின், ரஷியா நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

ஸ்பெயினில் அந்த நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசிய கனிமொழி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது இந்தியாவின் தேசிய மொழி குறித்து கேட்கப்பட்டதற்கு 'பன்முகத்தன்மை' என்று பதிலளித்துள்ளார். கனிமொழியின் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஸ்பெயின் மண்ணில், 'இந்தியாவின் தேசிய மொழி பன்முகத்தன்மை' என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!

இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமை மொழியைப் பேசிய கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | அமெரிக்காவிற்குள் அபாயகர கிருமியை கடத்திய சீனா?

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்: நிகழாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் இல்லை

தமிழகத்தில் நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் புதிய இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு உள்ள 11,... மேலும் பார்க்க