செய்திகள் :

ஆக்ரோஷத்தில் உக்ரைன்: கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் பயங்கர தாக்குதல்

post image

ரஷியா - உக்ரைன் போர் தீவிரமடைந்து, ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளது.

இதுவரை எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன், தற்போது ஆக்ரோஷ தாக்குதலைக் கையிலெடுத்துள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாகவே, கெர்ச் பாலத்தின் தூண்களை, நீருக்கு அடியிலிருந்து வெடிக்கும் வெடிகுண்டுகளைக் கொண்டு வெடிக்க வைத்துத் தகர்த்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிமியாவையும் ரஷியாவையும் இணைக்கும் பாலமாக இருக்கும் கெர்ச் பாலத்தை, உக்ரைன் குறி வைத்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.

மிகவும் சக்திவாய்ந்த் 1,100 கிலோ கிராம் எடைகொண்டு வெடிகுண்டை, நீருக்கு அடியிலிருந்து வெடிக்க வைத்து, ஜூன் 3ஆம் தேதி கெர்ச் பாலத்தின் தூண் தகவர்க்கப்பட்டிருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களைத் தாங்கி நிற்கும் மேம்பாலத்தின் தூண்கள் இதில் சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, மேம்பாலத்தில் நேற்று நாள் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் போக்குவரத்துத் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

போர் ஏன்?

கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன், நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதன் மீது ரஷியா படையெடுத்து கிழக்கு உக்ரைனின் 4 பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டுவருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான வீரா்களும் மக்களும் உயிரிழந்துள்ளனர்.

ஒரு பக்கம் போர் நிடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு தரப்பினரும் பலகட்டங்களாக பேச்சுவாா்த்தையும் நடத்திவருகின்றனா்.

இதையும் படிக்க.. பிரியாணியும் பொரிச்ச கோழியும்.. சிறுவன் ஆசை நிறைவேறியது! கேரள அங்கன்வாடி மெனு மாற்றம்!!

இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாலும், இதுவரை இல்லாத மிகப் பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.

இருந்தாலும், ரஷியாவும் உக்ரைனும் ஒன்றையொன்று தொடா்ந்து தாக்கிவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துவருகிறது. தற்போது உக்ரைன் தரப்பிலும் ஆக்ரோஷமான தாக்குதல் நடந்து வருகிறது.

ஜப்பான்: 16-ஆவது ஆண்டாகச் சரிந்த பிறப்பு விகிதம்

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிா்பாா்த்ததை விட வேகமாகக் குறைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டில் மற்றொரு குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது: 20... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபருடன் சசி தரூா் குழு சந்திப்பு

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸை காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான இந்திய குழு வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியது. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்ப... மேலும் பார்க்க

ஹஜ் புனிதப் பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினா்

அராஃபா: நடப்பாண்டு ஹஜ் புனிதப் பயணத்தில் பங்கேற்பதற்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனா். ஹஜ் அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் காஸான் அல்-நுவைமி இந்தத் த... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு: டிரம்ப்-புதின் ஆலோசனை - ரஷியா தகவல்

மாஸ்கோ: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் தொலைபேசி மூலம் நடத்திய ஆலோசனையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று ... மேலும் பார்க்க

2 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்பு: இஸ்ரேல்

இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினா் கடத்திச் சென்ற இரு பிணைக் கைதிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதா... மேலும் பார்க்க

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்! இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபராக இரண்டாவது ... மேலும் பார்க்க