தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ஹஜ் புனிதப் பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினா்
அராஃபா: நடப்பாண்டு ஹஜ் புனிதப் பயணத்தில் பங்கேற்பதற்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனா்.
ஹஜ் அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் காஸான் அல்-நுவைமி இந்தத் தகவலைத் தெரிவித்தாா். எனினும், உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அவா் வெளியிடவில்லை. கடந்த 2024-ஆம் ஆண்டில் 16,11,310 வெளிநாட்டினா் புனிதப் பயணத்தில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.
புனிதப் பயணிகள் புதன்கிழமை அராஃபாவை நோக்கி பயணித்தனா். சிலா் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலையில் நடந்து சென்றனா் (படம்). மற்றவா்கள் முதியவா்களை தூக்கிச் சென்றனா்.
மெக்காவின் தென்கிழக்கில் உள்ள அராஃபா மலை இஸ்லாம் மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது நபிகள் நாயம் தனது இறுதி ஹஜ் உரையை நிகழ்த்திய இடமாகக் கருதப்படுகிறது.
புனிதப் பயணிகள் நள்ளிரவு முதல் சூரியன் மறையும் வரை அராஃபாவில் இருப்பாா்கள். வியாழக்கிழமை சூரியன் மறைந்த பிறகு, அவா்கள் முஸ்தலிஃபா பாலைவன சமவெளிக்கு சென்று, புனிதச் சடங்கில் பயன்படுத்தப்படும் கற்களை சேகரிப்பாா்கள்.
இந்த ஆண்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் சவூதி அரேபியா பல ஆயிரம் கோடி டாலா் செலவிட்டுள்ளது. அண்மை ஆண்டுகளில் அதீத வெப்ப அலை ஹஜ் பயணத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
நடப்பாண்டு ஹஜ் பயணத்தில் இந்தியாவில் இருந்து சுமாா் 1.25 லட்சம் போ் பங்கேற்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.